Gurudevar.org

இந்து மத எழுச்சியே இந்தியாவின் செழுச்சி!

இந்தியாவின் செழுச்சியே இம்மானுட நல விழிச்சி!

ஞானாச்சாரியாரின் எழுத்துக்களிலிருந்து:

குருதேவர்

இந்து வேத விடுதலை

  1. இப்படி ஒரு தலைப்பில் இந்து வேதம் பிறந்த நாட்டிலேயே கட்டுரை ஒன்று எழுத நேரிட்டிருக்கின்றது என்பது பற்றி எண்ணிப் பார்த்திட்டாலேயே போதும். இந்தத் தலைப்புக்கு உரிய பொருளும், நோக்கமும் மிகத் தெளிவாக விளங்கிடும். அதாவது இந்து வேதம் என்ற ஒன்று இன்றைய காலக் கட்டத்தில் இந்துக்களுக்கு முறையாகவும், நிறைவாகவும், முழுமையாகயும், மெய்யாகவும் …. கிடைக்காமல், கிடைக்க முடியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது, மறைக்கப்பட்டிருக்கிறது, மறைக்கப்பட்டிருக்கிறது என்ற மாபெரும் பேருண்மையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும், கொள்கையாகும், குறிக்கோளாகும்.
  2. குமரி முதல், இமயத்தின் விளிம்பு வரை பரந்து விரிந்து கிடக்கின்ற இந்துமத இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்த இரு எல்லைகள் கடந்துள்ள பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்து வேதத்தின் பகுதிகளும் இந்து வேதம் பற்றிய செய்திகளும், இந்து வேதம் பற்றிய வரலாறுகளும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஒன்று திரட்டப்பட்ட பிறகுதான் இந்து வேதம் பற்றிய ஆய்வுகள் கணக்கற்று தோன்றின. அத்துடன் இந்து மதத்திற்கு, இந்து மக்களுக்கு, இந்துக்களுக்கு …. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டு விட்ட கணக்கற்ற, கடுமையான சோதனைகள், வேதனைகள், இழிவழிவுகள், பழிபாவங்கள், கண்முடித்தனமான தாக்குதல்கள் …. முதலியவைகள் இந்து மதத்திற்குரிய இந்து வேதத்தையும் இந்து வேத வரலாற்றையும் தேடும்படிச் செய்து விட்டன.
  3. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சந்திர குலத்திற்குரிய சித்தர் கருவூறார் பாரம்பரியத்தில் தோன்றிய கண்டப்பகோட்டை சித்தர் ஏளனம்பட்டியார் உ.இராமசாமி பிள்ளையவர்கள் ஆசியாக் கண்டம் முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் தேடி அலைந்து இந்து வேதத்தையும் இந்துவேத வரலாற்றையும் பற்றிய பல பேருண்மைகளைத் தொகுத்திட்டார். அப்பேருண்மைகள் இந்துவேத விடுதலை முழக்கத்தை பிறப்பெடுக்கச் செய்தன. ஆனால் சித்தர் ஏளனம்பட்டியாரோ முதல் இந்திய விடுதலைப் போர் எனப்படும் சிப்பாய்க் கலகத்தின் கதாநாயகராக, உயிர் மூச்சாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதால், இந்து வேத விடுதலை முழுக்கம் இந்து வேத மத நாடான இந்தியாவின் விடுதலை முழுக்கமாக மாறிற்று. ஆனால் இவருடைய சமகாலத்தவரான அருட்பெருஞ்சோதி ஆண்டவர், அருட்பாக் கொடை வள்ளல், வடலூர்ப் பெருவெளி, வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் அவர்கள் ஹிந்து வேதத்தையும், ஹிந்து வேத ஆகமத்தையும், சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளையும், கோத்திர நம்பிக்கைகளையும் கடுமையாகச் சாடித் தகர்த்து மெய்யான இந்து வேத விடுதலைக்குரிய “இந்துவேத விடுதலை முழக்கத்தை எழுப்பினார்”. அந்த இந்துவேத விடுதலை முழக்கம்தான் ஆத்திகர்களையும், நாத்திகர்களையும் இந்து வேதம் பற்றிச் சிந்திக்கச் செய்தன.
  4. இந்த இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னுமாக இந்த உலகம் முழுவதுமே அந்தந்த மதங்கள் அவரவர் வேதங்களைப் பற்றிய ஆய்வுகளைத் துவக்கின. அதன் விளைவாக ஒவ்வொரு மதமும் தன்னுடைய வேதத்தையும், வேத வரலாற்றையும் வெளிப்படுத்திப் பரப்புகின்ற மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டிட்டன. இந்தியத் துணைக் கண்டத்தில் மார்க்சீயக் சிந்தனைகளைக் காட்டுத் தீ போல் பரப்பிய M.N.இராய் அவர்களும், ம.ப.பிள்ளை அவர்களின் கம்யூனிசக் கட்சி என்ற நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்களின் மூலமும், பகுத்தறிவு இயக்கம், பகுத்தறிவுக் குடியரசு இயக்கம், உலக மத ஆய்வுக் குழு, உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டுச் சங்கம் ….. முதலிய பல்வேறு வகையான இயக்க அமைப்புக்களின் மூலமும், இந்தியாவில் ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கும் மடங்களின் வழியாகவும், துணையாகவும் இந்து மதத்திற்குரிய இந்து வேதம் பற்றிய ஆய்வுகளைத் துவக்கினார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருபெரும் பிரிவுகள் தோன்றின. அவை தொடர்ந்து இருபெரும் துருவங்களாக வளர்ந்தனவே தவிர வேறு எவ்விதமான பயனும் விளையவில்லை.
  5. இவற்றுக்கெல்லாம் ஒரு விடிவு ஏற்படும் வண்ணமாக இம்மண்ணுலகின் முடிவுக்குள் தோன்ற வேண்டிய நாற்பத்தெட்டு பதினெண் சித்தர் பீடாதிபதிகளில், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியுள்ள குவலய குருபீடம், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஆதிஅனாதி கடந்த தம்பிரான் அடிகளார், கருமூலப் பண்டாரம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார், அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் அவர்கள் இந்துவேத வளவளர்ச்சிக்காகவும், இந்துமத ஆட்சி மீட்சிக்காகவும் தமது பணிகளைத் துவக்கினார். இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் மடமும், இந்து மதத்தை இம்மண்ணுலகில் நிறுவிய பதினெண் சித்தர் பீடமும் முறையாக குருகுலம், திருகுலம், தருகுலம், கருகுலம் எனும் நான்கையும் துவக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்க வல்ல சன்னிதானம், ஆதினம், தம்பிரான், பண்டாரம், பண்டார சந்நிதி, ஆச்சாரியார் …. முதலிய 48 வகைப்பட்ட அருட்பட்டத்தவர்களையும் உருவாக்கியுள்ளன. இவர்கள் உலகெங்கும் பரந்து விரிந்து செயல்பட்டு இந்து வேதம் இந்த உலகம் முழுவதும் ஆற்றியுள்ள அரும்பெரும் பணிகளையும், சாதித்துள்ள சாதனைகளையும் தெள்ளத் தெளிவாகப் பட்டியலிட்டுத் தொகுத்தார்கள். இந்து வேதம் இந்த உலகில் தோன்றக்கூடிய அனைத்து வேதங்களுக்கும் மூலமாகவும், அடிப்படையாகவும், கருவாகவும் உயிர் முச்சாகவும் தொடர்ந்து இருந்து வருகின்றது என்ற பேருண்மையை மிகத் தெளிவாக வரையறுத்து, வடிவப்படுத்தி உலகுக்கு வழங்கும் சாதனைகளைச் சாதித்தார்கள். இதன்பிறகே, கடந்த சில நூற்றாண்டுகளாக முளைவிட்டுக் கிளைத்துச் செழித்து வளர்ந்து வரும் இந்து வேத விடுதலை முழக்கத்திற்குப் புதிய வளர்ச்சியும் ஏற்பட்டன, ஏற்பட்டன, ஏற்பட்டன.
  6. இன்றைக்கு உலகம் முழுவதுமுள்ள மதவாதிகள் இந்துவேத நூல்களையும், இந்து மத நூல்களையும் காண வேண்டுமென்ற அக்கரைக்கும், ஆர்வத்துக்கும், அவாவிற்கும் ஆளாகி விட்டார்கள். குறிப்பாக உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தங்களுடைய இந்து மதத்தின் இந்து வேதம் பற்றித் தெரிந்து கொள்ள அளப்பரிய அக்கரையையும் ஆர்வத்தையும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அவற்றின் பயனாகத்தான் இந்து வேத விடுதலை முழக்கம் என்ற தலைப்பில் கட்டுரைகள் ஆராய்ச்சி நூல்கள் ஆராய்ச்சியாளர்கள், பத்தியாளர்கள், மதவாதிகள், இலக்கியவாதிகள் …. தோன்ற ஆரம்பித்து விட்டார்கள், தோன்ற ஆரம்பித்து விட்டார்கள், தோன்ற ஆரம்பித்து விட்டார்கள்.
  7. இந்த கால கட்டத்தில்தான் இந்து வேதத்திற்கும் இந்து மதத்திற்கும் உரிய மெய்யான பிறப்பிடம், இருப்பிடம், காப்பிடம், வாரிசு, தலைமை .. முதலியவை பற்றிய பேருண்மைகள் வெளிவர இருக்கின்றன.


நான்வேத வாசகங்கள்

தமிழரே இந்துமத மூலவர்கள்; தமிழரே இந்துமத நாயகங்கள்; தமிழரே இந்துமத வித்துக்கள்; தமிழரே இந்துமதச் சொத்துக்கள்; தமிழரே இந்துமதக் காவலர்கள்; தமிழ்மொழியே கடவுள் மொழி; தமிழ்மொழியே தெய்வமொழி; தமிழ்மொழியே தேவமொழி; தமிழ்மொழியே வேதமொழி.

விரிவாகப் படித்திட...

இந்துவேத மதமே உலக மூலமதம்

வடகோடி இமயத்தின் முடி முதல் தென்கோடி கன்னியாகுமரிக் கடலடி வரை உள்ள அனைத்து கடவுள்களுக்கும் தெரிந்த ஒரே ஒரு மொழி அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியேயாகும். இந்த உலகில் உள்ள அனைத்து வகைப்பட்ட கோயில்களிலும் உள்ள நூற்றியெட்டு வகை (108) திருப்பதிச் சக்கரங்களும், இருநூற்று நாற்பத்து மூன்று (243) வகைச் சத்திபீடச் சக்கரங்களும், ஆயிரத்தெட்டு (1008) வகைச் சீவாலயச் சக்கரங்களும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் எழுதப்பட்டவை! எழுதப்பட்டவை!! எழுதப்பட்டவை!!!

விரிவாகப் படித்திட...

தமிழருக்கு மட்டும் தாழ்ச்சி ஏன்?

இம்மண்ணுலகிலுள்ள எல்லா இனத்தவர்களும் வரலாற்றுப் போக்கிலே உயர்ச்சியையும், தாழ்ச்சியையும்; வெற்றியையும், தோல்வியையும்; உரிமை வாழ்வையும், அடிமை வாழ்வையும்; … மாறி மாறித்தான் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தத் தமிழர்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாகப் பெற்றிட்ட மிகப்பெரிய சமய சமுதாய வீழ்ச்சியிலிருந்து மீட்சியே பெறவில்லை; உயர்ச்சியே அடையவில்லை. சங்ககாலத் தனியரசுகள், பிற்காலச் சோழப் பேரரசு, பிற்காலப் பாண்டியப் பேரரசு, … என்று விரல்விட்டு எண்ணக் கூடியவைதான் தமிழரின் அரசியல் வெற்றிக்குச் சான்றாக இருக்கின்றன. அதுவும் இந்த ஒருசில தமிழினப் பேரரசுகளின் காலத்திலும், தமிழ்மொழி மதத்துறையில் உரிமையையும் பெருமையையும் இழந்து தீண்டாமை நிலையையே பெற்றிருந்தது. அதாவது, தமிழினப் பேரரசுகளின் காலங்களிலும் சமசுக்கிருதம்தான் மதத்துறையில் ஆட்சியும் உயர்ச்சியும் உரிமையும் பெருமையும் பெற்று விளங்கிடும் மொழியாக இருந்திட்டது.

விரிவாகப் படித்திட...

திருவாசக முன்னுரை

தேவாரம் பாடிய நால்வரில் மறவேள்வி நடத்தி சித்தர் நெறியான இந்துமதத்தை மீண்டும் இம்மண்ணில் நிலைநாட்டிய ‘திருஞானசம்பந்தர்’ வட ஆரியரல்ல என்ற பேருண்மையையும்; அத்வைதத்தை உருவாக்கிய ‘ஆதிசங்கரர்’ அவர்களும் வட ஆரியரல்ல! தமிழரே! என்ற பேருண்மையையும் தமிழர்கள் முதற்கண் உணர வேண்டும். ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரின் ஆசியோடு புறப்பட்டு; சைவமதமாம் சித்தர் நெறியின் உண்மைகளை நிலைநாட்டிட மதுரை மாநகர் சென்று சமணர்களுடன் அனல்-புனல் வாதத்தில் வென்றார். தோற்ற சமணர்கள் தாங்களாகவே மனம் இறுகி கழுவில் ஏறி இறந்தனரே அன்றி! வட ஆரியர்கள் கூறுவது போல் சம்பந்தரோ, பாண்டிய மன்னனோ சமணர்களைக் கழுவில் ஏற்றவில்லை.

விரிவாகப் படித்திட...

குருவாக்கியங்கள்

… … குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்களில் பல்வேறு மொழியினர்களும், பல்வேறு இனத்தவர்களும் இருந்த போதிலும் எல்லா இந்துக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சில குருவாக்கியங்களை இங்கு குறிப்பிடுகிறோம். இந்தக் குருவாக்கியங்களாவது தமிழ்மொழிக்கும் இந்துவேதத்துக்குமுள்ள இணைப்பையும், பிணைப்பையும் தமிழர்களுக்காவது உணர்த்தட்டும், உணர்த்தட்டும், உணர்த்தட்டும் என்ற அறிவிப்பை வழங்கியே இந்துமதம் எப்படியாவது என்றைக்காவது ஹிந்துமதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் படுவதற்குரிய பணிகளைத் தொடருகிறோம் இந்துமதத் தந்தையாகிய யாம்!!!… - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

விரிவாகப் படித்திட...

தமிழனைத் தமிழனாக்குவது

‘தமிழனைத் தமிழனாக்குவதே சிறந்த தவம்’, … … இப்படி குருவாசகங்களை கணக்கற்று எல்லாக் குறிப்பேடுகளிலும் குருபாரம்பரியத்திலும் எழுதிச் செல்லுகிறோம் யாம். இவற்றின் மூலமாவது கணக்கற்றோரின் முயற்சியால் என்றாவது ஒருநாள் தமிழன் தமிழனாக்கப்படுவான். அப்படி, தமிழன் தமிழனாக்கப் பட்ட பிறகுதான் இந்துவேதம் வளவளர்ச்சியையும், ஆட்சிமீட்சியையும் பெற்றிடும். அதையொட்டியே, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும், ஆட்சிமீட்சி பெற்றிடும். - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

விரிவாகப் படித்திட...

ஞானாச்சாரியார் கருத்துக்கள்

தமிழ்மொழியில்தான் எல்லா கோயில்களிலும் பூசை செய்ய வேண்டும், அருட்சினை செய்ய வேண்டும். அப்படி தமிழ்மொழியில் பூசை செய்யாததால்தான் இந்துக் கோயில்கள் பாழடைந்தன. இந்துக்கள் மாற்றுமதக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்…

விரிவாகப் படித்திட...

இராமகிருட்டிணரியம்

இராமகிருட்டிணர் வாழ்ந்த மெய்யான இந்துமத வாழ்வும், அவர் போதித்த மெய்யான இந்துமதத் தத்துவமும் ஒருங்கிணைந்த இராமகிருட்டிணரியம் (அல்லது இராமகிருட்டிணரியல் = The Ramakrishnarism) மீண்டும் உடனடியாக இந்தியா முழுவதும் முளைத்துக் கிளைத்துத் தழைத்துச் செழித்து வளர வேண்டும்.

விரிவாகப் படித்திட...

மணு தரும சாத்திரம்

அனாதிசிவனார், இளமுறியாக் கண்டத்தில் இருந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதங்களை சமாதானப் படுத்தவும், சமநிலைப் படுத்தவும், ஒருநிலைப் படுத்தவும், ஒற்றுமைப் படுத்தவும் முயற்சிக்கும் சாதனங்களாக ‘மணுநீதி நூல்கள் பதினெட்டை’ அருளினார்கள்.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - I

இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - II

சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் … செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் பதினெண்சித்தர்களின் ஆகம விதிகளை மீறி ஒன்பது (9) கோள்களையும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய வழிபாட்டுநிலையங்களில் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். … இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக … மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!!.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - III

உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான். இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே.

விரிவாகப் படித்திட...




கருத்துச் சொற்கள்

10வது பதினெண்சித்தர் பீடாதிபதி 2
caste system 1
divine healing 1
mystical healing 1
theory of re-incarnation 1
அன்புச் சேவுக 28
அமாவாசை விரதம் 1
அரசயோகி 1
அரசியல் புரட்சி 1
அரசியல் மாற்றம் 1
அரசியல் வரலாறு 1
அருட்கணிப்பு 1
அருட்சித்தருக்கு அறிவுரை 1
அருட்பணி 1
அருட்புரட்சி 1
அருட்போர் 1
அருணகிரிநாதர் 1
அருளாட்சி அமைப்பு 5
அருளாட்சி ஆணைகள் 13
அருளாட்சிக்கு அழைப்பு 1
அருளாளன் 1
அருளுரை 1
அருள் 1
அருள்வாக்கு 1
அவதாரம் 1
ஆசனம் 1
ஆதிசங்கரர் 10
ஆன்மீகம் 1
ஆரிய மாயை 1
ஆலயம் 1
இ.ம.இ. கொள்கைகள் 1
இந்திமொழி வெறியர்கள் 1
இந்தியா 1
இந்தியாவின் மதம் 1
இந்தியாவை ஆளவேண்டிய தத்துவம் 1
இந்து 1
இந்துத் தத்துவம் 1
இந்துமத ஆண்டு 1
இந்துமத மூலநூல்கள் 1
இந்துமத மூலவர்கள் 1
இந்துமதம் 18
இந்துவேத மதம் 1
இந்துவேத மாநாடுகள் 1
இந்துவேதம் 2
இராசராச சோழன் 2
இராசிவட்டக் கருவூறார்கள் 1
இராமகிருட்டிணர் பரம அம்சர் 1
இராமன் 2
இறவாயாக்கை 1
இலக்கிய வரலாறு 1
இளமுறியாக் கண்டம் 1
உயிரணு 1
உருவ வழிபாடு 1
உலக அருளாளர்கள் 1
உலக இனங்களின் விடுதலை 1
உலக மதங்கள் 2
உலக வரலாறு 1
உலகமொழிகளின் விடுதலை 1
ஊழ்வினை 1
எந்த மானுடம் இந்த மானுடம் 3
ஏசுநாதர் 1
ஏட்டறிவு 1
ஏட்டுலகப் புரட்சி 1
ஐந்தரம் 1
ஐயனார் 1
ஐயப்பன் 1
ஒற்றுமை 1
ஒளி வணக்கம் 1
ஓகம் 1
ஓகாசனம் 1
கடவுளர் வடிவம் 1
கடவுள் 1
கடவுள்மொழி 1
கருவூரார் 1
கருவூறார் 2
காகிதப் போர் 1
காயத்திரி 5
காயந்திரி 7
காலக் கணக்கீடு 1
காவல் தெய்வம் 2
காவிரியாற்றங்கரைக் கருவூறார் 1
கீதை 1
குமரிக் கண்டம் 1
குரு 2
குருதிப்பலி 4
குருதேவர் 1
குருதேவர் எழுதிய கடிதங்கள் 1
குருதேவர் யார் 14
குருபாரம்பரியம் 1
குருவாக்கியங்கள் 1
குருவாக்கு 1
குலதெய்வங்கள் 1
கோயில் 1
கோயில் உயிர்ப்பு 1
கோயில் நிருவாகம் 1
கோயில் புத்துயிர்ப்பு 1
கோயில் வழி அருளாட்சி 1
சங்க கால இலக்கியங்கள் 1
சத்தி இலிங்கம் 1
சத்தி பீடங்கள் 1
சந்தானாச்சாரியார்கள் 1
சனாதன தருமம் 1
சபரி 3
சமசுகிருதம் 1
சமய மறுமலர்ச்சி 1
சமய வரலாறு 1
சமுதாயத் தத்துவம் 1
சமுதாயப் புரட்சி 1
சாதிகள் 4
சித்தர் ஏளனம்பட்டியார் 2
சித்தர் கருவூறார் 2
சித்தர் காகபுசுண்டர் 1
சித்தர் நெறி 7
சித்தர் மணு 1
சித்தாந்தம் 1
சித்தி 1
சிவ இலிங்கம் 1
சிவநெறி 2
சிவராத்திரி 1
சிவாலயங்கள் 1
சுவாமி கைவல்யம் 1
சேரர்கள் 1
சைவசமய சித்தாந்தம் 1
சொல்லடி நாயனார் 2
சோதிடம் 1
சோழநாடு 1
ஜாதிவெறி 1
ஞானக்காட்சி 1
ஞானாச்சாரியார் 2
ஞானாச்சாரியார் வரலாறு 2
டார்வின் 2
தஞ்சைப் பெரிய கோயில் 3
தத்துவம் 1
தமிழனின் தவம் 1
தமிழன்தான் இந்துமதத் தலைவராக முடியும் 1
தமிழரின் தாழ்ச்சி 1
தமிழர் தாழ்ச்சி 1
தமிழர் மதம் 3
தமிழின மொழி மத விடுதலை 4
தமிழினப் பெருமை 1
தமிழிலக்கியம் 1
தமிழே பூசைமொழி 2
தமிழ் வளர்த்த அன்னியர் 1
தமிழ்நாடு தமிழருக்கே 1
தமிழ்மொழி 4
தமிழ்மொழிப் பெருமை 1
தாய்நாடு 1
தாய்மொழி 1
திராவிட இனம் 1
திராவிடர் கழக மாநாடு 1
திரு 1
திருஞானசம்பந்தர் சாதனை 2
திருப்பதிகள் 1
திருவள்ளுவர் 2
திருவாசகம் 1
திரேதாயுகம் 1
தீர்த்தங்கரர் 1
தென்மதுரை 1
தேவகுமாரர் 2
தேவதூதர் 1
தை மாதப் பெருமை 1
தொன்மதுரை 1
நமது பணிநிலைகள் 1
நரகம் 1
நரகாசுரன் 1
நாட்டுரிமை 1
நாட்டுலகப் புரட்சி 1
நான்கு யுகங்கள் 1
நான்வேத வாசகம் 1
நாயனார் 1
பகுத்தறிவுக் கொள்கை 1
பகுத்தறிவுப் பணி 2
பஞ்சாங்கம் 1
பட்டறிவு 1
பண்டைய அரசு 1
பண்பாட்டு இயக்கம் 1
பதினெட்டாம்படிக் கருப்புகள் 2
பதினெண் வேளிர்கள் 1
பதினெண்சித்தர் பீடம் 1
பதினெண்சித்தர்கள் 6
பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி 1
பந்தள மன்னன் 1
பரிகாரம் 1
பரிணாம வளர்ச்சி 1
பாம்புச் சத்தி 1
பாவம் 1
பிராமணச் சூழ்ச்சி 3
பிரிவினை 1
பிறாமண மறுப்பு 1
பிற்காலச் சோழப்பேரரசு 1
பீடாதிபதி 4
புண்ணியம் 1
புத்தர் 1
புத்தாண்டு வாழ்த்து 1
புரட்சி 1
பூசைமுறை 1
பெண் விடுதலை 1
பெரியார் 9
பொய்யான ஹிந்துமதம் 3
போதனைகள் 2
மகாத்மா காந்தி 1
மணீசர்கள் 2
மதவழிப் புரட்சி 1
மனிதப் பண்பு 1
மரணமிலாப் பெருவாழ்வு 1
மருதையா பிள்ளை 1
மறுபிறப்பு 2
மாணிக்கவாசகர் 1
மானுட நலம் 2
முதல்மொழி 1
முன்னோர் வழிபாடு 2
முற்பிறப்பு 2
மெய்யான இந்துமதம் 5
மொழியுரிமை 1
மொழிவழி இனம் 1
மோட்சம் 1
யோகம் 1
லிங்கம் 1
வட ஆரியர் 1
விஞ்ஞானம் 1
வேதமதம் 1
ஹிந்துமதம் 14