இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால் பேசப்படுகின்ற மொழிகளிலேயே முதல்மொழியாக அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக (அனைத்து மொழிகளின் ஒலிகளையுடைய ஒரே மொழியாக) விளங்குவது இத் தமிழ்மொழிதான்.
இந்தத் தமிழ்மொழிதான் பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் எழுத்து மொழியும் (The Literary Language or Diction), பேச்சுமொழியும் (The Conversational Language or Diction) ஒரே மாதிரியாக இருக்கக் கூடிய சிறப்பைப் பெற்றிருக்கின்றது.
இந்தத் தமிழ்மொழியில்தான் ஆரம்பக் காலம் முதல் இன்றுவரை இடைவிடாமல் தொடர்ந்து அருளாளர்கள் தோன்றி அருளூறும் வாக்குகளையும், வாக்கியங்களையும், வாசகங்களையும் வழங்கி வருகிறார்கள். இந்தத் தமிழ்மொழிதான் பதினெண்சித்தர்களால் ‘அண்டபேரண்டமாளும் அருளுலக ஆட்சிமொழி’ என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்தத் தமிழ்மொழிதான் ‘அருள்மொழி’, ‘ஆண்டவர்மொழி’, ‘இறைமொழி’, ‘உயிர்மொழி’, ‘உயிர்ப்புமொழி’, ‘எல்லாமொழி’, ‘கடவுள்மொழி’, ‘தெய்வமொழி’, ‘தேவமொழி’, ‘மாறாத இளமையுடைய கன்னிமொழி’, ‘அமுதத் தமிழ்மொழி’, ‘செந்தமிழ் மொழி’, ‘பைந்தமிழ் மொழி’, ‘வண்டமிழ் மொழி’ என்றெல்லாம் பாராட்டப்படுகிறது.
சிவபெருமான் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்பதால், அவர் ‘ஞானாச்சாரியாராக’, ‘குவலய குருபீடமாக’, ‘இந்துமதத் தந்தையாக’, ‘தத்துவ நாயகமாக’, ‘அருளாட்சி நாயகமாக’, … தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண்சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார்.
இம்மண்ணுலக அகப் பண்பாடுகளுக்கும் புற நாகரீகங்களுக்கும் அடிப்படையான மதங்களின் மூலமதமான ‘மெய்யான இந்துமதமே’ தமிழருடைய மதம். இம் மதம், அறியாமைகளாலும், புரியாமைகளாலும், தெரியாமைகளாலும் பல்வேறு பிரிவுகளையும், திரிபுகளையும், மாற்று வடிவங்களையும், சிதைவுகளையும், மொழியாட்சிகளையும் பெற்றுவிட்டது.
நாமறிய, இந்தக் கலியுகத்தில் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் இந்து மதத்துக்குரிய இந்தியாவுக்குள் நுழைந்த நாள் முதல்; இந்தியா முழுதும் பரவியிருந்த தமிழர்களின் அகவாழ்வுக்கும், புறவாழ்வுக்கும் பல்வேறு வகையான சிதைவுகளும், சிக்கல்களும், சீரழிவுகளும் சிறுகச் சிறுகத் தோன்ற ஆரம்பித்து விட்டன.
(1) தமிழ் நாட்டிலுள்ள தலைவர்கள், வழிகாட்டிகள், வழித்துணைவர்கள் என்ற மூன்று நிலையினருமே இனத்துக்கோ, நாட்டுக்கோ, பண்பாட்டுக்கோ நிலையானத் தொண்டு செய்பவர்களாகவோ, வழங்காதவர்களாகவோதான் இருந்திடுகின்றார்கள். இதற்குக் காரணம் தமிழ் மொழி அறிவோ, இலக்கிய அறிவோ, வரலாற்று அறிவோ இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் அனைத்துத் துறைகளிலும் முதல்நிலைச் செயல்வீரர்களாகவும், தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், வழித் துணைவர்களாகவும் இருக்கின்றார்கள்.