“… … … இதேநிலைதான் இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வருகிறது. வரலாற்றில் ‘இந்தியா’ என்ற ஒரு நாடு எதிர்பாராமல் உருவாகிவிட்ட காரணத்தை எவருமே எண்ணிப் பார்க்கத் தயாராய் இல்லை. அதாவது நூற்றுக் கணக்கான மொழிகள் பேசுகின்ற பல்வேறு வகையான பண்பாடுகளையுடைய மக்களை யெல்லாம் இந்திய நாடு என்ற பெயரால் ஒருமைப் படுத்த முயலும் வெறிநிறைந்த, கண்மூடித் தனமான, காட்டுமிராண்டித் தனமான, பைத்தியக் காரத்தனமான முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்த முயற்சியால் இரண்டு பெரிய செயல்திட்டங்கள் ஒன்றுக்கொன்று கெடுதல் செய்யும் வண்ணம், அதாவது ஒன்றை ஒன்று எதிர்த்து அழிக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன. அதாவது, எதிர்பாராமல் உருவான இந்தியா ஒரே நாடாக என்றென்றும் இருக்கலாம். அது தவறில்லை; ஏனெனில் நூற்றுக் கணக்கான மொழிகளைப் பேசக் கூடிய பல்வேறு இனமக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் பல்லாயிரக் கணக்கான சதுர மைல் பரப்புள்ள இந்திய நாட்டை ஒரு வளமிக்க, ஒரு வலிமை மிக்க, பாதுகாப்பு மிக்கத் தனிநாடாக வாழச் செய்ய முடியும்.
ஆனால், இந்தி மொழி பேசும் இனத்தவரைத் தவிர மற்ற மொழி பேசும் இனத்தவரெல்லாம் தங்களுடைய தாய்மொழியை மறந்தும், துறந்தும், மறுத்தும், வெறுத்தும், முடிந்தால் கொலை செய்து புதைத்தும், மாபெரும் தியாகம் செய்தும் இந்தி மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்; அதாவது நூற்றுக் கணக்கான மொழியினர்கள் தங்கள் தங்களுடைய தாய்மொழிக்கு விரோதிகளாகவும், துரோகிகளாகவும், கொலைகாரர்களாகவும் மாற வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால், ‘இந்தி மொழிக் காரர்கள் தங்களுடைய இந்தி மொழியின் மூலம் மற்ற எல்லா மொழிகளையும் சிறுகச் சிறுகக் கழுத்தை நெரித்துக் கொன்று புதைப்பதற்கு இந்திய நாட்டு மற்ற மொழிக்காரர்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டும், உதவி செய்ய வேண்டும், உதவி செய்ய வேண்டும்’ என்ற கொள்கையையே இந்திய தேசிய வாதிகள் அல்லது அகில இந்திய அரசியல் வாதிகள் விளக்குகிறார்கள், வலியுறுத்துகிறார்கள்.
அதாவது, புதிதாக உருவாகியுள்ள இந்திய நாடு என்ற அமைப்புச் சிதைந்து விடாமல் இருக்க வேண்டுமேயானால் இந்தியா முழுவதும் இந்தி என்ற ஒரே மொழிதான் பேசப்பட வேண்டும் என்பதுதான் அகில இந்திய அரசியல்வாதிகளின் கண்மூடித் தனமான காட்டுமிராண்டிக் கொள்கை. இப்படி இந்திய நாட்டை இந்தி என்ற மொழியின் மூலம் ஒருமைப்பாடு (Uniformity) பெறச் செய்யும் முயற்சிதான் இந்தியாவின் ஒற்றுமையைச் (The Unity) சுக்கல் நூறாக உடைத்தெறியப் போகிறது.
அதாவது, இந்திய மக்களிடையிலே ஒற்றுமையை வளர்க்க வேண்டுமென்ற நேர்மையான தத்துவம், இந்தியாவில் இந்தி மொழியின் மூலம் ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டுமென்ற தவறான, தீமையான, பகுத்தறிவற்ற கொள்கையால் மாபெரும் தோல்வியைப் பெறப் போகின்றது. ஏனெனில், அரசியல் மாயைகளும், வெறிகளும் காலப் போக்கில் கணிசமான அளவு தணிந்திடும். அப்பொழுது நூற்றுக் கணக்கான மொழிகளுக்குரிய மக்கள் அகில இந்திய அரசியல்வாதிகளால் தங்கள் தங்களுடைய தாய்மொழி எப்படி எப்படியெல்லாம் வீழ்ச்சியுற்றது?! என்னென்ன வகைகளில் தாழ்ச்சி பெற்றது?! எந்தெந்த நிலைகளில் அடக்கி ஒடுக்கப்பட்டது?! எத்தகைய பெரிய உரிமை இழப்புகளைப் பெற்றது?! …. என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.
அந்தக் கணக்கிற்குக் கிடைக்கக் கூடிய விடையால், தாய்மொழிப்பற்று எனும் நெருப்பு, அகில இந்திய அரசியல் மாயை அல்லது மயக்கம் என்ற சாம்பல் குவியல்களுக்கு அடியிலிருந்து புகைந்து கனிய ஆரம்பித்திடும். அப்பொழுது அந்தந்த மொழிக்காரர்களின் இனத்துக்கு ஏற்பட்டிட்ட கடுமைகளும், கொடுமைகளும் எண்ணிப் பார்க்கப் பட்டுப் பெருமூச்சு சிறு காற்றாக வீசத் தொடங்கும். அதனால், சாம்பல் மேட்டிலுள்ள சாம்பல் தூள்கள் அடித்துச் செல்லப்பட்டுப் புகைந்து கனிய ஆரம்பித்த நெருப்பு நன்கு கனிந்து சுடர் விட ஆரம்பிக்கும். அப்பொழுது மீண்டும் அந்தந்த இனத்தவர்கள் தங்கள் தங்களின் வரலாற்றுப் பெருமைகளையும், பாரம்பரிய உரிமைகளையும், இலக்கியச் செல்வ வளங்களையும், இயற்கையின் செழுமைகளையும் எண்ணி எண்ணி எடுத்து எடுத்துப் பேசி; வட்டார வெறிகளையும், பிரிவினை வாதங்களையும் சாம்பல் மேட்டில் கனிந்து கொண்டிருக்கும் நெருப்புக் கனல்களின் மீது நன்கு காய்ந்து உலர்ந்த குச்சிகளாகவும் சிறிய சிறிய துண்டு விறகுக் கட்டைகளாகவும் அடுக்கிடுவார்கள்.
அதனால் கனிந்து சுடர் விட்டுக் கொண்டிருந்த நெருப்புத் துண்டுகள் மேற்படி விறகுக் கட்டைகளில் பற்றி விண்ணைத் தொடக் கூடிய காட்டுத் தீயாகச் சுடர்விட்டுச் சுழன்று சுழன்று எரிய ஆரம்பித்திடும். அந்தக் காட்டுத் தீயில் இந்தியா என்ற நாட்டமைப்பு என்னவாகும் என்றே சொல்ல முடியாது! சொல்ல முடியாது! சொல்ல முடியாது! அப்பொழுது அகில இந்திய தேசிய வாதிகள் எனப்படுபவர்கள் ‘தீப்பற்றி எரிகின்ற வீட்டிலிருந்து எடுக்கப்படும் பொருள்கள்தான் இலாபம்’ என்ற உணர்வில் எரிகின்ற தீயை அணைக்கும் பணியில் ஈடுபடாமல் எரிந்து கொண்டிருக்கக் கூடிய வீட்டிலிருந்து பொருள்களை எடுத்துக் காப்பாற்றும் பணியில்தான் ஈடுபடுவார்கள்.
அதாவது, இந்த அகில இந்திய தேசியவாதிகள், இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை என்பதையும், இனிமேல் அப்படியொரு நாடு இருக்கத் தேவையில்லை என்பதையும் எண்ணித் தாய்மொழிப் பற்றாளர்கள் இந்திய நாட்டைத் துண்டாடுவதைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாதவர்களாகி விடுவார்கள். … … … … …
-சித்தர் காகபுசுண்டர் காக்கா வழியன் பண்ணையாடி ம. பழனிச்சாமி பிள்ளை
தமிழரே இந்துமத மூலவர்கள்; தமிழரே இந்துமத நாயகங்கள்; தமிழரே இந்துமத வித்துக்கள்; தமிழரே இந்துமதச் சொத்துக்கள்; தமிழரே இந்துமதக் காவலர்கள்; தமிழ்மொழியே கடவுள் மொழி; தமிழ்மொழியே தெய்வமொழி; தமிழ்மொழியே தேவமொழி; தமிழ்மொழியே வேதமொழி.
வடகோடி இமயத்தின் முடி முதல் தென்கோடி கன்னியாகுமரிக் கடலடி வரை உள்ள அனைத்து கடவுள்களுக்கும் தெரிந்த ஒரே ஒரு மொழி அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியேயாகும். இந்த உலகில் உள்ள அனைத்து வகைப்பட்ட கோயில்களிலும் உள்ள நூற்றியெட்டு வகை (108) திருப்பதிச் சக்கரங்களும், இருநூற்று நாற்பத்து மூன்று (243) வகைச் சத்திபீடச் சக்கரங்களும், ஆயிரத்தெட்டு (1008) வகைச் சீவாலயச் சக்கரங்களும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் எழுதப்பட்டவை! எழுதப்பட்டவை!! எழுதப்பட்டவை!!!
இம்மண்ணுலகிலுள்ள எல்லா இனத்தவர்களும் வரலாற்றுப் போக்கிலே உயர்ச்சியையும், தாழ்ச்சியையும்; வெற்றியையும், தோல்வியையும்; உரிமை வாழ்வையும், அடிமை வாழ்வையும்; … மாறி மாறித்தான் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தத் தமிழர்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாகப் பெற்றிட்ட மிகப்பெரிய சமய சமுதாய வீழ்ச்சியிலிருந்து மீட்சியே பெறவில்லை; உயர்ச்சியே அடையவில்லை. சங்ககாலத் தனியரசுகள், பிற்காலச் சோழப் பேரரசு, பிற்காலப் பாண்டியப் பேரரசு, … என்று விரல்விட்டு எண்ணக் கூடியவைதான் தமிழரின் அரசியல் வெற்றிக்குச் சான்றாக இருக்கின்றன. அதுவும் இந்த ஒருசில தமிழினப் பேரரசுகளின் காலத்திலும், தமிழ்மொழி மதத்துறையில் உரிமையையும் பெருமையையும் இழந்து தீண்டாமை நிலையையே பெற்றிருந்தது. அதாவது, தமிழினப் பேரரசுகளின் காலங்களிலும் சமசுக்கிருதம்தான் மதத்துறையில் ஆட்சியும் உயர்ச்சியும் உரிமையும் பெருமையும் பெற்று விளங்கிடும் மொழியாக இருந்திட்டது.
தேவாரம் பாடிய நால்வரில் மறவேள்வி நடத்தி சித்தர் நெறியான இந்துமதத்தை மீண்டும் இம்மண்ணில் நிலைநாட்டிய ‘திருஞானசம்பந்தர்’ வட ஆரியரல்ல என்ற பேருண்மையையும்; அத்வைதத்தை உருவாக்கிய ‘ஆதிசங்கரர்’ அவர்களும் வட ஆரியரல்ல! தமிழரே! என்ற பேருண்மையையும் தமிழர்கள் முதற்கண் உணர வேண்டும். ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரின் ஆசியோடு புறப்பட்டு; சைவமதமாம் சித்தர் நெறியின் உண்மைகளை நிலைநாட்டிட மதுரை மாநகர் சென்று சமணர்களுடன் அனல்-புனல் வாதத்தில் வென்றார். தோற்ற சமணர்கள் தாங்களாகவே மனம் இறுகி கழுவில் ஏறி இறந்தனரே அன்றி! வட ஆரியர்கள் கூறுவது போல் சம்பந்தரோ, பாண்டிய மன்னனோ சமணர்களைக் கழுவில் ஏற்றவில்லை.
… … குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்களில் பல்வேறு மொழியினர்களும், பல்வேறு இனத்தவர்களும் இருந்த போதிலும் எல்லா இந்துக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சில குருவாக்கியங்களை இங்கு குறிப்பிடுகிறோம். இந்தக் குருவாக்கியங்களாவது தமிழ்மொழிக்கும் இந்துவேதத்துக்குமுள்ள இணைப்பையும், பிணைப்பையும் தமிழர்களுக்காவது உணர்த்தட்டும், உணர்த்தட்டும், உணர்த்தட்டும் என்ற அறிவிப்பை வழங்கியே இந்துமதம் எப்படியாவது என்றைக்காவது ஹிந்துமதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் படுவதற்குரிய பணிகளைத் தொடருகிறோம் இந்துமதத் தந்தையாகிய யாம்!!!… - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.
‘தமிழனைத் தமிழனாக்குவதே சிறந்த தவம்’, … … இப்படி குருவாசகங்களை கணக்கற்று எல்லாக் குறிப்பேடுகளிலும் குருபாரம்பரியத்திலும் எழுதிச் செல்லுகிறோம் யாம். இவற்றின் மூலமாவது கணக்கற்றோரின் முயற்சியால் என்றாவது ஒருநாள் தமிழன் தமிழனாக்கப்படுவான். அப்படி, தமிழன் தமிழனாக்கப் பட்ட பிறகுதான் இந்துவேதம் வளவளர்ச்சியையும், ஆட்சிமீட்சியையும் பெற்றிடும். அதையொட்டியே, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும், ஆட்சிமீட்சி பெற்றிடும். - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.
தமிழ்மொழியில்தான் எல்லா கோயில்களிலும் பூசை செய்ய வேண்டும், அருட்சினை செய்ய வேண்டும். அப்படி தமிழ்மொழியில் பூசை செய்யாததால்தான் இந்துக் கோயில்கள் பாழடைந்தன. இந்துக்கள் மாற்றுமதக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்…
இராமகிருட்டிணர் வாழ்ந்த மெய்யான இந்துமத வாழ்வும், அவர் போதித்த மெய்யான இந்துமதத் தத்துவமும் ஒருங்கிணைந்த இராமகிருட்டிணரியம் (அல்லது இராமகிருட்டிணரியல் = The Ramakrishnarism) மீண்டும் உடனடியாக இந்தியா முழுவதும் முளைத்துக் கிளைத்துத் தழைத்துச் செழித்து வளர வேண்டும்.
அனாதிசிவனார், இளமுறியாக் கண்டத்தில் இருந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதங்களை சமாதானப் படுத்தவும், சமநிலைப் படுத்தவும், ஒருநிலைப் படுத்தவும், ஒற்றுமைப் படுத்தவும் முயற்சிக்கும் சாதனங்களாக ‘மணுநீதி நூல்கள் பதினெட்டை’ அருளினார்கள்.
இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.
சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் … செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் பதினெண்சித்தர்களின் ஆகம விதிகளை மீறி ஒன்பது (9) கோள்களையும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய வழிபாட்டுநிலையங்களில் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். … இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக … மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!!.
உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான். இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே.