Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • குருவாசகங்கள்
  • குருவாசகங்கள்

    குருவாசகங்கள்

    குருவாசகங்கள் - I

    1. ஊழ்வினை தொடரும்
    2. பழம் பிறப்புக்களின் நினைவு திருவருளால் இணையும் போது பிறப்பற்ற பெருநிலை கிட்டும்.
    1. ஆவி, ஆன்மா, உயிர் மூன்றும் குருவருளால் இணையும் போது பிறப்பற்ற பெருநிலை கிட்டும்.
    2. இறைவன், உயிர், பாசம்(தளை) எனும் மூன்றும் குருவருளாலேயே உணரப்பட்டு உரிமையாக்கப்படும்.
    3. குருவையே விழியாக, வழியாக, வழித்துணையாகக் கொள்பவரே அணுக்கருவுலகையும் வென்று உயர்ந்து நிலைபேறு பெறுவர்.
    4. பழம்பிறப்புணர்த்தும் உறவுகளும் உரிமைகளும் எல்லையற்ற களிப்பு நல்குமென்பதால் குருவாக்கிலோ, குருவாசகத்திலோ இவற்றை உணர்பவரே பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கிலும் நிறைவு பெறுவர்.
    5. கரு, குரு, திரு மூன்றும் ஒருமைப்படுபவரே ஞானத்தால் தருவாக இருப்போர்க்குத் தாயாகத், தாரமாகத், தானீன்ற மகளாகச் செயல்படுவர்.
    6. குருவால் இட்டும், தொட்டும், சுட்டியும் விளக்கப்பட்டவையைப் பயன்படுத்த முடியாதவர் கண்ணிருந்தும் குருடரே.
    7. அறியாமை மிக்கவரின் இச்சையடக்கச் சொல்லிய சூட்சுமங்களே மோட்ச நரகங்கள்.
    8. புரியாமை மிக்கவரின் வெறிப்போக்குகளை நெறிப்படுத்தும் சூழ்ச்சிமிகு ஆட்சிச் சொற்களே பாவபுண்ணியங்கள்.

    குருவாசகங்கள் - II

    1. அன்றாடம் கண்ணுக்குமுன் காணும் கணக்கற்ற காரிகையர் மாதந்தோறும் மலரும் புனித மலர்களே! இவர்களைப் பூசை செய்தே பூவுலகும், மூவுலகும் வெல்லலாம்.
    2. அத்தனைக்கும் மூத்தவளான ஆத்தாளின் வடிவான பெண்டிரை அன்புடன் நினைத்துப் பாசமுடன் பரவிச் சேர்ந்து வாழ்ந்தாலே அருட்சொத்தனைத்தும் தேடி வந்து சேரும்.
    3. பூசைத்தெய்வமாக, மலராக வந்த பாவையரை விதவையரென ஒதுக்கல் மாபெரும் பழியையும் பாவத்தையும் நல்கும்.
    4. அங்கமெல்லாம் கையாக்கி ஆயுதமெடுத்துக் காக்கும் ஆத்தாளின் வடிவான பெண்டிரே பேரின்ப வீடு.
    5. திங்கள் சூடிய சிவனே மங்கைக்குப் பாதி உடல் ஈந்த பிறகு மங்கையை அடிமைப்படுத்துதல் பெரும்பாவமும், பழியுமே தரும்.
    6. சங்கரனாரே மங்கையை முடிமேல் தாங்கிய பின்னும் பெண்ணை அருளுலகத் தடையென மறுத்தலும், வெறுத்தலும், பழித்தலும் பேதமையன்றே¡!
    7. மூவரும், தேவரும், பிறரும் போற்றித் துய்த்து உய்வு பெறும் இன்ப ஊற்றான பெண்களே துன்பம் நீக்கும் மருந்து.
    8. கங்கைக்கரைக் கண்ணன் எங்கும், எப்போதும் நங்கையரோடிருப்பது கண்டும் மங்கையரை நீக்கும் தவவாழ்வு எற்றுக்கு?
    9. சித்தர்கள் கன்னிகளை ஆத்தாளாக்கிப் பூசைகள் நிகழ்த்த மறைகளும், முறைகளும், நெறிகளும், வேதங்களும், நாதங்களும், போதங்களும், ஓதங்களும் நல்கியிருப்பது கண்டும் பெண்ணைக் கோபிப்பதோ, தண்டிப்பதோ, வருத்துவதோ பெரும்பாவம் என்பது புரியாதிருப்பது மடமையினும் மடமையன்றோ!
    10. சித்தர்கள் ‘பெண்பழியே பெரும்பழி’ எனப் புகன்றும் பெண்களை இழிவு செய்யும் புன்மையாளர்கள் வாழ்வதே இயற்கையின் சீற்றமிகு தண்டனைகளுக்குக் காரணம்.

    தொடர்புடையவை: