Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 48:46:46

48:46:46

இருக்கு வேதம் காண்டம்-48, மண்டலம்-46, நாள் உரைக்கோவை வாசகம் 46

“அனாதிக் காலத்தில் தோன்றிட்ட எண்ணூறுக்கும் மேற்பட்ட வேதங்களும், வேதமதங்களும் அருளுலகைப் பற்றிய வளர்த்திட்ட தவறான கற்பனைகள், முறைகேடான கதைகள், பொய்யான சரித்தரங்கள், சரித்திரங்கள், சரித்திறங்கள், பயனில்லாத மந்தர மந்திர மந்திறப் பூசைமொழிகள், வாய்மையற்ற பூசைவிதிகள், உய்வைத் தரமுடியாத போலியான மதச் சடங்குகள்.... முதலியவற்றால் விளைந்திட்ட அருளுலக அறியாமைகளை அகற்றிட ஆதிசிவனாரும், அவரது திருமகனார் முருகப் பெருமானாரும், இவர்கள் உருவாக்கிய நாற்பத்தொன்பது திருவிடத்தைச் சேர்ந்த இந்தியாக்களூம், திருவிடத்துச் செயல்வீரரான திராவிடர்களும் முயன்று முயன்று உரிய பயன்கள் பெரிய அளவில் விளையாமையால்; ஆதிசிவனாரின் திருமகனான முருகப் பெருமான், தம் தந்தைக்கே இந்துவேத இந்துமதப் பிறணவங்களின் இயலாமைகளை விளக்கி அருளுரை வழங்கினார். அதன் பயனாக ஆதிசிவனாரும், விண்ணுலக ஐவர் குழுவையும், மண்ணுலக ஐவர் குழுவையும் ஒன்று கூட்டி இருக்கு வேதத்தில் வாக்காகக் கூறப்பட்டுள்ளவைகளைத் தனித்தனியாகப் பிரித்து அசுரவேதம் என்றும், வாக்கியங்களாகக் கூறப்பட்டுள்ளவைகளைத் தனியாகப் பிரித்து அதர்வான வேதம் என்றும், வாசகங்களாகக் கூறப்பட்டுள்ளவைகளைத் தனியாகப் பிரித்து யாமவேதம் என்றும் அருளுலகில் ஈடுபடக் கூடிய அருளாளர்களுக்காக, ஆன்மீக வாதிகளுக்காக, பத்தியாளர்களுக்காக, ஆத்திகர்களுக்காக, திருவிடப் பணிகளைச் செய்யும் திராவிடர்களுக்காக ஒரே வேதமாக இருந்த இந்துவேதத்தை நான்கு வேதங்களாக ஆக்கினார். இவற்றை அறிவிக்கும் வண்ணமாக இருக்கு வேதத்தின் இறுதியிலும், மற்ற மூன்று வேதங்களின் ஆரம்பத்திலும், ‘அருளுலக அறியாமைகள் அகலட்டும்’ என்று தலைப்பிட்டே அருளுலகு பற்றிய பல உண்மைகளை மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் ஐயமற எளிமையாகப் புரிந்து கொள்ளூம் வண்ணம் விளக்கங்கள் அருளப் பட்டுள்ளன. அவை இருக்குவேதத்தில் காண்டம்-49இல் மண்டலம்-47இல் 48 உரைக்கோவை வாசகங்களிலும் விளக்கப் பட்டுள்ளன. இவையே மற்ற மூன்று வேதங்களின் காண்டம்-1இல் மண்டலம்-2இல் உள்ள 48 வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும் விளக்கப் பட்டுள்ளன.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே