04:11:25
இருக்கு வேதம் காண்டம்-4, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-25
“அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள்; அறவி, உறவி, துறவி, மறவி எனும் நான்குவகை வாழ்க்கையினரும்; அவரவர்க்குரிய பிறந்த நேர விண்மீன், இராசி, கோள்நிலை இயக்கம் முதலியவற்றிற்கேற்பவே; நன்மை தீமைகள், இழப்பு ஈட்டங்கள், நோய்நொடிகள், தேக்க வீக்கங்கள், இகழ்ச்சி புகழ்ச்சிகள், தாழ்ச்சி உயர்ச்சிகள், ... முதலிய நிலைகளைப் பெற்றிடுவர் என்பதால்; இவற்றினின்று தப்பித்துக் கொள்ளவும், பாதிப்பைக் குறைத்துக் கொள்ளவும் உரிய வழிமுறைகளாக இருக்குவேதமான இந்துவேதத்திலும், இதனின்று பிரிக்கப்பட்ட அசுரவேதம், அதர்வான வேதம், யாமவேதம் எனும் மூன்று வேதங்களிலும், முப்பத்தாறு (36) இந்துமத நூல்களிலும், பரிகார நெறிமுறைகளையும் இவற்றைச் செயலாக்கித் தருவதற்காக நூற்றுத் தொண்ணூற்றிரண்டு வகைப்பட்ட உண்ணாழிகளையும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட கோயில்களையும், (8,84,736) எட்டு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநூற்று முப்பத்தியாறு கடவுள்களையும் தெளிவாகத் திட்டமிட்டு அருளியுள்ளனர்.”