Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 04:11:25

04:11:25

இருக்கு வேதம் காண்டம்-4, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-25

 “அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள்; அறவி, உறவி, துறவி, மறவி எனும் நான்குவகை வாழ்க்கையினரும்; அவரவர்க்குரிய பிறந்த நேர விண்மீன், இராசி, கோள்நிலை இயக்கம் முதலியவற்றிற்கேற்பவே; நன்மை தீமைகள், இழப்பு ஈட்டங்கள், நோய்நொடிகள், தேக்க வீக்கங்கள், இகழ்ச்சி புகழ்ச்சிகள், தாழ்ச்சி உயர்ச்சிகள், ... முதலிய நிலைகளைப் பெற்றிடுவர் என்பதால்; இவற்றினின்று தப்பித்துக் கொள்ளவும், பாதிப்பைக் குறைத்துக் கொள்ளவும் உரிய வழிமுறைகளாக இருக்குவேதமான இந்துவேதத்திலும், இதனின்று பிரிக்கப்பட்ட அசுரவேதம், அதர்வான வேதம், யாமவேதம் எனும் மூன்று வேதங்களிலும், முப்பத்தாறு (36) இந்துமத நூல்களிலும், பரிகார நெறிமுறைகளையும் இவற்றைச் செயலாக்கித் தருவதற்காக நூற்றுத் தொண்ணூற்றிரண்டு வகைப்பட்ட    உண்ணாழிகளையும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட கோயில்களையும், (8,84,736) எட்டு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநூற்று முப்பத்தியாறு கடவுள்களையும் தெளிவாகத் திட்டமிட்டு அருளியுள்ளனர்.”

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே