Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 02:11:43

02:11:43

இருக்குவேதம் காண்டம்-2, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-43:

“இப் பூவுலகில் இம் மாஞாலத்தில், இப் புவிப்பரப்பில், இப் பூமியில், இவ் வையகத்தில் யுக முடிவுகளில் நிலப்பரப்புகள் நீர்ப்பரப்பினுள் மூழ்கியும், நீர்ப்பரப்பிலிருந்து புதிய நிலப்பரப்புக்கள் நெடிதுயர்ந்து வான்முட்டும் மலைகளோடு எழுந்தும், தோற்றமாற்றங்கள் இயற்கையாக விளைந்திடும். ஆனாலும், அண்டபேரண்டம் முழுவதும் என்றென்றும் இருந்துவருகின்ற, இருந்து வரக்கூடிய, இருந்து வரப்போகின்ற இருக்கு வேதமான இந்துவேதம் மட்டுமே அனைத்து வகைப்பட்ட பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் நல்வாழ்வு தரும் விழியாக, வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாகா விளங்கிடும். எனவே, யுகமுடிவுகளால் விளையும் அழிவுகளையும் கடந்து உலகம் முழுவதும் உள்ள பயிரினங்களையும், உயிரினங்களையும் காக்கின்ற இருக்கு வேதமான இந்துவேதத்தை இந்த உலகின் மூலவேதமாக, முதல் வேதமாக, முழுமையான வேதமாக, பொதுவேதமாக உலகோர் உணர்ந்திட முயற்சிக்கும் வாழ்க்கையாகவே ஒவ்வோர் இந்துவின் வாழ்க்கையும் அமைய வேண்டும். இதற்குரியவர்களாக, இந்துக்களைத் தயாரிக்கவே இருக்கு வேதத்திலும், அதன் உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட அசுர வேதத்திலும், அதர்வான வேதத்திலும், யாம வேதத்திலும் ‘ஓர் இந்துவின் வாழ்க்கை’ என்ற தலைப்பிட்டே வேத உரைக்கோவைகளும், உரைக்கோவை வாசகங்களிலும், வாக்குகளும், வாக்கியங்களும், வாசகங்களும் இவற்றின் கருவாக அதாவது சூலாக உருவாக்கப் பட்டுள்ள 4,42,368 சூலகங்கள் எனப்படும் சுலோகங்களிலும் உரிய விளக்கங்கள் பெரிய அளவில் தரப் படுகின்றன.”

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே