Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 13:38:41

13:38:41

இருக்கு வேதம் காண்டம் 13, மண்டலம் 38, நாள் உரைக்கோவை வாசகம் 41.

'இருக்குவேதத்தின்படி காவிகட்டுவதோ, மனைவியில்லாமல் சாமியாராக, சன்னியாசியாக இருப்பதோ ஏற்றுக்கொள்ள இயலாதது ஆகும்'

'ஆசிரமம், மடம், பீடம் என்று திருமணமாகாதவர்கள் சன்னியாசியாகவோ,  சாமியாராகவோ, ஆச்சாரியாராகவோ இருந்து செயல்படக் கூடாது. அதுவும், தாடி, மீசை, தலைமுடியை நீக்கி விட்டு அருளுலகில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களால், அண்டபேரண்டங்களில் இருந்து அருளாற்றலைப் பெற முடியாது! பெறமுடியாது!! பெறமுடியாது!!! பெறவே முடியாது! இப்படி இருப்பவர்கள், அதாவது தாடி, மீசை, தலைமுடி இல்லாதவர்கள் நான்கு வேதங்களில் எந்தவொரு வேதத்தையும் ஓதமுடியாது! ஓதவும் கூடாது! இவர்கள் வேண்டுமானால் உலகியலாக மதநிறுவன நிர்வாகங்களில் தலைவர்களாக செயல்படலாம். இவர்கள் பிறரை வாழ்த்துவதற்குக் கூட உரிமை கிடையாது என்று இருக்குவேதம் மிகமிகத் தெளிவாக திருமணமாகாதவர்களையும், தாடி மீசை தலைமுடி முதலியவைகளை நீக்கிக் கொண்டிருப்பவர்களையும் அருளுலகுக்கு ஏற்றவர் அல்ல' என்று கடுமையாக கண்டிக்கிறது.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே