Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • சித்தர்கள்>
  • குருபாரம்பரியம்
  • குருபாரம்பரியம்

    குருபாரம்பரியம்

    பதினெண் சித்தர்கள் இம்மண்ணுலகின் ஆயுளை 48 பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றி நிறைவு பெறுவதுடன் இணைத்துள்ளார்கள். முதலில் இராசிவட்டக் கருவூறார்கள் என்ற 12 பேர்களும், பிறகு முறையே விண்மீன் வட்டத்திற்கு 27 பேர்களும், கோள் வட்டத்திற்கு 9 பேர்களும் தோன்றுவார்கள் என்று குறித்துள்ளார்கள்.

    இன்றைய சரித்திரத்திற்கு தெரிந்த காலகட்டத்தில் தோன்றியவர்களில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்களும், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் இந்த உகத்தில் குறிப்பிடத் தக்க செயல்களைச் செய்தவர்கள்.

    அமராவதியாற்றங்கரைக் கருவூறார் சமுதாயப் புரட்சியின் மூலம் அனைத்தையும் சாதித்து விட முடியும் என நம்பினார். இவரது காலத்தில் குமரிக் கண்டத்திலிருந்த பனி மூடிய தென் இமய மலையையும், தென் வேங்கட மலையையும் அடிப்படையாகக் கொண்ட சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கிய வரலாறுகள் முறையாகவும், முழுமையாகவும் எழுதப் பட்டன. உலகம் முழுவதும் வாணிகத் தொடர்பு வைத்திருந்த தமிழினத்தின் பல்வேறு வகையான சமுதாய வீழ்ச்சிகளையும், தாழ்ச்சிகளையும் சரிக் கட்டுவதற்காக சமுதாய மாற்றப் பணிகள் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அது மூன்றாவது தமிழ்ச் சங்கத்தின் முடிவையே தந்தது. தமிழின விரோதிகளும், துரோகிகளும் தாக்கியதால் தமிழ்மொழி இன நாட்டு உணர்வுக் கோட்டையாக விளங்கிய மதுரை மாநகரம் எரிக்கப் பட்டது. தமிழ்ப் புலவர்கள் வெட்டிக் கொலை செய்யப் பட்டனர். தமிழ் ஏட்டுக் குவியல்கள் அழித்தொழிக்கப்பட்டன. இம்மாபெரும் அழிவுக்குப் பிறகு தமிழினத்தின் நல்வாழ்வுக்காகத் தமிழ் இலக்கியங்கள் 'சங்க கால இலக்கியங்கள்' என்ற பெயரில் தேடித் தொகுக்கப் பட்டன.  இம்மாபெரும் பணியை நிகழ்த்திட்ட அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் எண்ணற்ற நூல்களை எழுதினார். தக்காரைக் கொண்டு எண்ணற்ற நூல்களையும் எழுதுவித்தார். அவைதான் தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழினம் எனும் முக்கோணக் கோட்டையைப் பழுது பார்த்துச் செப்பனிட்டு நினைவுச் சின்னமாகப் பாதுகாத்துக் கொடுத்தன. இந்த நினைவுச் சின்னத்தில் உண்மையான தமிழின அரசு ஒன்று தோன்றி ஆட்சி செய்யச் செய்தவரே காவிரியாற்றங்கரைக் கருவூறார்.

    தொடர்புடையவை: