Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • அன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்
  • அன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்

    அன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்

    அருட்சத்தி என்பது பொதுவான மனித அறிவின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருட்சத்தியால் மனித வாழ்வின் அனைத்து வகையான தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் சரி செய்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் மனித வாழ்வில் அறிவியலால் நலப்படுத்த முடியாத அனைத்து வகையான குறைகளையும் அருட்சத்தியால் நலப்படுத்த முடியும்.

    இப்பேருண்மையினை அடிப்படையாகவும், உள்ளீடாகவும் உந்துசத்தியாகவும் கொண்டு அமைத்ததுதான் இந்து மதம், எனவே, இன்றைய பதினெண்சித்தர் பீடாதிபதியின் தலைமையில் அருளாளர்கள் அருட்கணிப்பும், பரிகாரங்களும் வழங்குகிறார்கள். தேவையானவர்கள் உரிய கட்டணம் செலுத்தி அவரவரின் பெயர், வயது, பெற்றோர் பெயர், கைரேகை (இரு கை), வாழுமிடத்து மண், …… முதலியவைகளை அனுப்பி வைத்தால் உரிய அருட் கணிப்பும், பரிகாரமும் வழங்கப்படும். இத்தொகை அருட்பணி விரிவாக்கத் திட்டத்திற்காகவும், குருதேவர் ஏடு வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படும்.

    குறிப்பு:

    1. பதினெண்சித்தர்கள் முறைப்படிதான் கணிப்புக்கள் இருக்கும் என்பதால் மேற்கொண்டு ஐயங்களை போக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் உரிய கட்டணத்தை அவ்வப்போது செலுத்தி, அஞ்சல் மூலமோ நேரிலோ விளக்கம் பெறலாம்.
    2. தொழில்களுக்கோ, இல்லத்துப் பூசைகளுக்கோ, கோயில் புத்துயிர்ப்புகளுக்கோ தேவையான மறைகளும், முறைகளும், நெறிகளும், வேதங்களும், பூசாவிதிகளும் அஞ்சல் வழியாகவும், நேரிலும் ஞானாச்சாரியார் குருதேவர் அவர்கள் மூலம் வழங்கப்படும். சாதி, மத, மொழி, இன வேறுபாடின்றி அனைவரும் தொடர்பு கொள்ளலாம். ஏனெனில் இம்மண்ணுலகில் உள்ள அனைத்து மூலக் கருவறைகளும், அருளாளர்களும் சித்தர் நெறியின் படைப்புக்களேயாகும்.
    3. தேவையான தைலங்கள், மருந்துகள் நோய்க்கேற்ப ஆய்வு செய்து வழங்கப்படும்.

    திருவுள ஓப்புதல் பெற்ற குருவாணை.

    தொடர்புடையவை: