Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • 'வேதம்' என்ற சொல்லின் விளக்கம்.
  • 'வேதம்' என்ற சொல்லின் விளக்கம்.

    'வேதம்' என்ற சொல்லின் விளக்கம்.

    கேள்வி:- ‘வேதம்’ என்ற சொல்லின் விளக்கம் என்ன?

    பதில்:- வேது - பக்குவப் படுத்துதல், பதப்படுத்துதல், செம்மைப் படுத்துதல், அடிபட்ட உடலுக்கு வலியைக் குறைத்து பழையபடி நலப்படுத்துதல், ஒத்தடம் தருதல் அல்லது வேது கொடுத்தல்.

    கருவறைகளுக்கு வேதித்த பொருட்கள் -> சமைத்த உணவு = வேதித்தவை.

    வேதித்தவைகளை வைப்பதற்கு முன்பும் பின்பும் சித்தம், நாதம், ஓதம், போதம் எனும் நான்கையும் ஓத வேண்டும் என்பதே பூசாவிதி.

    வேதங்களைக் கற்றவன் வேதியன் (பண்பட்டவன், கற்றவன்) - கருவாலும், குருவாலும், தருவாலும், திருவாலும் உரிய வண்ணம் பக்குவப் படுத்தப் பட்டவனே வேதியன். வேதிக்கப் பட்டவன் சொல்லுவது வேதம்.

    மறை: மறைக்கப்பட்டது.

    முறை: முறைப்படுத்தப்பட்டது.

    நெறி: செயல் வடிவிலுள்ள செயல் திட்டங்கள்.

    இதற்கடுத்து வருவதே வேதம்.