Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • கருவூறார் கீதை.
  • கருவூறார் கீதை.

    கருவூறார் கீதை.

    1. தமிழே தெய்வம்!
    2. தமிழே அருளுலகக் காவல் சத்தி!
    3. தென்னாடுடைய சிவனே போற்றி!
    4. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    5. பதினெண் சித்தர்களின் இந்துமதம் ஒரு வாழ்வியல் நெறி!
    6. அண்டபேரண்டங்களில் வாழும் விண்ணுலக மதமே பதினெண் சித்தர்களின் இந்துமதம்! இயற்கை
    7. பயிரினங்களையும் உயிரினங்களையும் நல வாழ்வு பெறச் செய்த முதல் மதமே இந்துமதம்!
    8. இம்மண்ணுலக அறிவுலக வரலாற்றின் விளக்கமே இந்து மதம்! இம்மண்ணுலகில் தோன்றிய முதல் மனித இனமான தமிழினமே இந்துமத நாற்றங்கால்!
    9. இந்துமதமும் தமிழ்மொழியும் பிரிக்க முடியாதவை!
    10. தமிழில்லாத இந்துமதம் நீரில்லாத பயிர் போல் வாடிடும்!
    11. தமிழே உலக மொழிகளின் தாயென்பது போல் இந்துமதமே உலக மதங்களின் தாய்!
    12. தாய்மொழியொலி அடிப்படையிலுள்ள பூசாமொழி வாசகங்களே உலக அருள் வித்துக்கள்!
    13. தமிழர்களே என்றென்றும் அருளை விளைவிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பர்! !. தமிழகம் இருண்டாலோ வறண்டாலோ அருளுலகில் தீயன செழித்திடும்!
    14. தமிழின மாட்சியே அருளுலக வளவளர்ச்சி!
    15. உலக மதங்களுக்குப் பீடாதிபதிகளின் கீதைகளே உயிரோட்டம்!
    16. தமிழையும் இந்துமதத்தையும் நம்பிட நான்கு யுக வரலாறுகள் புரிய வேண்டும்!
    17. தமிழர்களே நான்கு யுகங்களின் தலைவர்கள்!
    18. தமிழையும் இந்துமதத்தையும் அநுபவத்தாலேயே அறியலாம்! புரியலாம்!
    19. தமிழும் இந்துமதமும் விண்ணுலகக் கொடைகள்!
    20. தமிழும் இந்துமதமும் மண்ணுலகினரின் உயிரும் உடலுமாகும்!
    21. தமிழே அனைத்து அருட்சத்தி சித்திகளையும் வழங்க வல்லது!
    22. எக்காலத்தும் தமிழும் இந்துமதமும் மானுடரின் கண்களாகும்!
    23. தமிழின வழிபடு நிலையங்களும் வாசகங்களுமே உலக மதப் பிணைப்பும் இணைப்பும் காக்கும்!
    24. தமிழே மனித வாழ்வின் ஆரம்பத்தையும் முடிவையும் விளக்கிடும்!
    25. இந்து மதமே மனிதவாழ்வைப் பயனுடையதாக்கும்!

    தொடர்புடையவை: