பத்தி 2

இப்படி இந்து என்ற சொல் பதினெண்சித்தர்களின் அருளுலகப் பொருளுலகப் படைப்புக்களையும், அடைவுகளையும், உறவுகளையும், உரிமைச் சுற்றங்களையும், உரிய நண்பர்களையும், தோழர்களையும், முழுமையாகக் குறிக்கின்ற ஒரு சொல்லாக இருப்பதால்தான், வேதம் என்ற சொல்லை இந்த இந்து என்ற சொல்லோடு சேர்த்து இந்து வேதம் என்ற அருளுலக ஏட்டறிவு வடிவப் படுத்தப் பட்டது அல்லது உருவாக்கப் பட்டது.

இதேபோல் இந்த இந்து என்ற சொல்லோடு மதம் என்ற சொல் சேர்க்கப்பட்டு இந்து மதம் என்ற அருளுலகப் பட்டறிவு வடிவப் படுத்தப் பட்டது அல்லது உருவாக்கப் பட்டது, இவை இரண்டுதான் அருளுலகுக்கும் கண்களாக விளங்குகின்றன. பொருளுலகுக்கும் கண்களாக விளங்குகின்றன.