Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > யாம வேதம் > 23:36:46

23:36:46

யாம வேதம் காண்டம்: 23, மண்டலம்: 36, நாள் வாசக மலர்: 46

 சாதுக்களின் வாரிசுகளாக, வழித்தோன்றல்களாக ... தோன்றிய இந்த மாஞாலத்தின் மணீசர்கள், இருக்குவேத நியதிப்படி தங்களை குறிப்பிட்ட சாதுக்களை + ஆதியாகக் கொண்டவர்கள் = குறிப்பிட்ட சாதியினர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு பல புதிய பிரிவுகளை உண்டாக்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த சாதுக்களை ஆதியாகக் கொண்டு உருவான சாதியினர்கள், தங்களுக்கிடையில் வேற்றுமைகளையும், உயர்வு தாழ்வுகளையும், போட்டி பொறாமைகளையும் உருவாக்கிக் வருவது தவறு. ஏனெனில் அருளுலக சாதனைகள் புரிந்து சாதுக்களாக ஆகிறவர்கள் குடும்ப ஆண்டவர்களாக மட்டும் செயலாக்கம் பெறுவதில்லை. இவர்கள் தங்கள் தங்களுடைய 1. அருவநிலை, 2. அருவுருவநிலை, 3. உருவ அருவநிலை, 4, உருவநிலை முதலியவற்றின் நிலைகளுக்கேற்பவும்; தங்களுடைய 1. திருநிலைப் பாரம்பரியம், 2. தருநிலைப் பாரம்பரியம், 3. கருநிலைப் பாரம்பரியம், 4. குருநிலைப் பாரம்பரியம் முதலியவைகளுக்கு ஏற்பவும்ல் தங்களுடைய வாழிடமான 1. கருவறை, 2. வெட்டவெளிக் கருவறை, 3, வழிபாட்டு நிலையக் கருவறை, 4. கோயில் மூலக் கருவறை என்பனவற்றிற்கேற்பவும்; தங்களை 1. குடும்ப ஆண்டவர்களாக, 2, குல தெய்வங்களாக, 3. கிராம தேவர் தேவதைகளாக, 4. நாட்டுக் கடவுளர்களாக செயலாக்கப் படுத்திக் கொள்கிறார்கள்! செயலாக்கப் படுத்திக் கொள்கிறார்கள்! செயலாக்கப் படுத்திக் கொள்கிறார்கள்! எனவே சாதிகளுக்கிடையில் வேற்றுமையோ, ஏற்றத் தாழ்வோ, உயர்வு தாழ்வோ, பிரிவினையோ, போட்டி பொறாமையோ, சண்டை சச்சரவோ பிறப்பதற்கு இடமேயில்லை! வளர்க்கப் படுவதில் பயனில்லை.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே