Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > யாம வேதம் > 18:36:43

18:36:43

யாமவேதம் காண்டம்-18, மண்டலம்-36, நாள் வாசகம்-43

“இம்மண்ணுலகில் பயிரினங்களையும் உயிரினங்களையும் பாது காப்பதற்காக, நூற்றுத் தொண்ணூற்று இரண்டு (192) வகைப்பட்ட உண்ணாழிகளை உடைய நாற்பத்தெட்டு வகைப்பட்ட கோயில்களை இம்மண்ணுலகுக் காக விண்ணுலகில் இருந்து வந்திட்ட பதினெண் சித்தர்களும், பதினெட்டாம் படிக்கருப்புகளும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட கடவுள் நிலையினர்களும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபடு நிலையினர்களும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர் நிலையினர்களும் படைத்திட்டார்கள். இந்த உண்ணாழியிலுள்ள கடவுள்கள் எட்டு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநூற்றி முப்பத்தாறு (8,84,736) வகைப்படுவார்கள் என்றாலும், இவர்கள் எந்தெந்த நாட்டில் இருக்கின்றார்களோ அந்தந்த நாட்டில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்களைத் தான் படையலாகப் படைக்க வேண்டும், இக்கடவுள்கள் எந்த இன மக்களால் வழிப்படுகிறார்களோ அந்த இனமக்கள் பயன்படுத்திக் கூடிய உடைகளையும் அணி கலன்களையும், வாசனைப் பொருள்களையும், மலர்களையும், இலைகளையும், பட்டைகளையும், வேர்கள் ... முதலியவைகளையும் தான் பூசையில் பயன்படுத்த வேண்டும், இக்கடவுள்கள் எந்த மொழியினரால் பத்தி செய்யப்படுகிறார்களோ! அந்த மொழிக்குரிய எழுத்துக்களையும், சொற்களையும், சொற்றொடர்களையும், வாக்குகளையும், வாக்கியங்களையும், வாசகங்களையும், பயன்படுத்தித்தான் பூசை மொழிகளையும், பூசை விதிகளையும், பிறவற்றையும் செயலாக்க வேண்டும், அப்பொழுதுதான், இக் கடவுள்கள் உயிர்ப்பு நிலைகளையும், புத்துயிர்ப்பு நிலைகளையும் குறிப்பாகப் பெற்ற அருளுலகப் பயன்களை மக்களுக்கு வழங்கிட முடியும்”


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே