Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > அதர்வான வேதம் > 01:08:21

01:08:21

அதர்வான வேதம் காண்டம்: 1, மண்டலம்: 8, நாள்வாக்கிய மலர்கள்: 21 முதல் 48 வரை.

 மண்ணுலகு கடந்து இருக்கின்ற ஏழு வெளிகளில் உள்ளவர்கள், இம்மண்ணுலகுக்கு வந்து நேரடியாகச் செயல்பட்டு செல்பவர்களும் உண்டு. இங்கேயே நிலையாக தங்கி இருந்து செயல்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட ஏழு வெளியினர்களையும் எதிர்பாராமல் தெரிந்து, பூசை செய்து, பத்தி சத்தி சித்தி முத்திகளில் தேர்ந்து குடும்ப ஆண்டவர்களாக மாறுகிறவர்களும் உண்டு. எனவேதான், குடும்ப ஆண்டவர்களிலேயே மானுட உடல் அமைப்புக்களிலும் வாழ்வியல்களிலும் மாறுபட்ட அமைப்புக்களையும், பண்புகளையும் உடையவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பூசை செய்யும் நெறி முறை விதிகள் குறிப்பிட்ட குடும்பத்தவர்களை மட்டும் அன்றி, மற்ற குடும்பத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவைகளாகவே இருக்கும்.
 இதன்படிப் பார்த்தால் இந்துமதத்தைச் சேராதவர்களும், இந்துமதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும், பகுத்தறிவு வாதிகள், நாத்திக வாதிகள், சீர்திருத்த வாதிகள் எனப்படுகிறவர்களும், குடும்ப ஆண்டவர்களின் பூசை நெறிமுறைகள் பற்றிக் கேட்கின்ற எந்தக் கேள்விக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அல்லது அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் வெளிப்படையாக இந்து வேதப் பேருண்மைகளைக் கூற முடியாது, கூறக் கூடாது.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே