Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > அசுர வேதம் > 48:02:05

48:02:05

அசுரவேதம் காண்டம்-48, மண்டலம்-2, நாள்வாக்கு-5:

“இருக்கு வேதமான இந்துவேதத்தில் இலைமறை காயாக ஞானம், அகஞானம், புறஞானம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் எனும் ஐந்துக்குமுரிய ஒன்பது கலைகளும் கூறப்பட்டு விட்டதால்; பல்வேறு வகையான எதிர்பாராத தீயவிளைவுகள் விளைந்து விட்டதால், அனைத்தையும் அடக்கி ஆளும் அசுர சத்தி, சித்திகளைத் தரக்கூடிய வித்தைகளுக்குரிய முத்தமிழ் எழுத்துக்களும், சக்கரங்களும், பூசைமொழிகளும், பூசைவிதிகளும், இருபத்தி மூன்று (23) வகைப்பட்ட காயந்திரிகளும், குருபீடங்களின் நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாவது மானுடர்க்குக் கிடைத்திடுவதற்காக அசுரவேதம் அருளப்பட்டது. எப்பொழுதாவது குருவுக்கு அடங்காத, கட்டுப்படாத அசுர சத்தி சித்திகளைப் பெற்ற அசுரர்கள் தோன்றிடுகிறார்கள். அவர்களை உரிய காலத்தில் வென்று கொன்று அடக்கிட யுகங்கள் தோறும் தோன்றிடும் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்களின் அருளாணை பெற்ற அண்டபேரண்ட அருளுலகத்தவர்கள் செயல்பட்டிடுகிறார்கள். ஆனால், ஆனால், ஆனால், இந்துவேதமும், இந்துமதமும் நான்காவது ஞானமான விஞ்ஞானத்தை வளர்த்திடாதே என்று கூறுகின்ற அறிவுரையை மீறினால்; மானுடரில் பாலுகர், சிறாஅர், இளைஞர், நட்டாள், பெரியவர், முதியவர், கிழவர் எனும் ஏழு பருவத்து ஆண்களிலும்; பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழுபருவத்துப் பெண்களிலும் கணக்கற்றுத் தோன்றிடும் அசுர வெறியுணர்வுடைய அசுரர்களை அடக்கி அழித்து மானுடரைக் காப்பது அரிது”.


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே