Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > அசுர வேதம் > 04:28:39

04:28:39

அசுரவேதம்: காண்டம்-4, மண்டலம்-28, நாள்வாக்கு-39

“எல்லா மானுடரும் தங்களுடைய எல்லையில்லா ஆசைகளாலும், வாழ்வியல் தொல்லைகளாலும், அருளுலகச் செல்வங்களான பத்தி சத்தி சித்தி முத்திகளைப் பெறுவதற்கு அதிகமாக காலத்தையோ, பயிற்சியையோ, முயற்சியையோ, பொருளையோ செலவிட முடியாது என்பதற்காகத்தான்; அன்றாடம் அல்லது வாய்ப்பும், ஓய்வும் கிடைக்கும்போது கால் யாம (சாம) நேரத்தையாவது செலவிட்டு பத்தி சத்தி சித்தி முத்திச் செல்வங்களைப் பெறுவதற்காகவே ‘அன்றாடப் பூசைமொழி’ எனும் அமுதத்தை பதினெண்சித்தர் மடத்தின் முதல் மடாதிபதியும், பீடாதிபதியுமான அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் ஆதிசிவனார் அவர்கள் இந்துவேதத்தின் ஒருபிரிவான அசுரவேதத்தில் வழங்கியிருக்கிறார்”


மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே