Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 8

பத்தி 8

பதினெண் சித்தர்கள், இம்மண்ணுலக முடிவுக்குள் ஏற்படக் கூடிய நான்கு யுகங்களிலும் வாழையடி வாழையென வரக் கூடிய பதினெண் சித்தர்களின் மரபில் மட்டுமே பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிப் பதினெண் சித்தர் மடத்தைத் தங்களுடைய வசதி வாய்ப்புக்களுக்கு ஏற்பத் தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் உருவாக்கி இந்து மறுமலர்ச்சிக்காக, இந்து வேத வளவளர்ச்சிக்காக, இந்து மத ஆட்சி மீட்சிக்காக, இந்துக்களின் விழிச்சிக்காக, எழிச்சிக்காக, செழிச்சிக்காக எல்லாவகையான செயல்களையும் மேற்கொண்டிடுமாறு திட்டம் செய்து சென்றிருக்கிறார்கள்.

இதில் மாற்று வேதங்களையோ அல்லது மாற்று மதங்களையோ அல்லது வேற்று மத மக்களையோ நகைத்தோ, எதிர்த்தோ, பகைத்தோ, இழித்தோ, அழித்தோ, பழித்தோ எந்தவித கருத்தோ, உணர்வோட்டமோ ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முளையளவு கூட இல்லவே இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

இதுவே, பதினெண் சித்தர்களுடைய, அருளுலகப் போதனைகளுடைய மேம்பாடுகளையும், சாதனைகளுடைய செம்மை நிலைகளையும் வெளிப்படுத்தும்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே