Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 7

பத்தி 7

இந்து மத வரலாறு, இம்மண்ணுலகில் இந்து மதம் தோற்றுவிக்கப்பட்ட இடம், காலம், இந்து மதத்தின் அடிப்படையான உயிர்நாடியான இந்து வேதம், இந்து வேதத்தின் 108 பூசை மொழி நூல்கள், இந்து வேத்தின் 48 பூசை விதி நூல்கள், இந்து வேதத்தின் 96 தத்துவ நூல்கள், இந்து வேத்தின் 144 செயல் சித்தாந்த நூல்கள், இந்து வேத அருளாளர்கள், இந்து வேதக் கடவுள்கள், இந்து வேதக் கோயில்கள், இந்து வேதக் கருவறைகள், இந்து வேதக் கலைகள் முதலியவை அனைத்தும் அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் இருக்கின்றன என்ற பேருண்மையும்;

தமிழர்கள்தான் அருளுலகின் மூலவர்கள், காவலர்கள், தத்துவ வித்துக்கள், செயல் சித்தாந்த நாற்றுக்கள் என்ற பேருண்மையும் குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம், குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம், குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம்.

அதனால், அனாதி காலத்து மதமான இந்துமதம் அனாதையாக்கப் பட்டு விடலாம், அனாதையாக்கப் பட்டு விடலாம், அனாதை யாக்கப்பட்டு விடலாம் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான், பதினெண் சித்தர்கள் இந்து வேத்தை என்றென்றைக்கும் தலைமை தாங்கிக் காத்து வழி நடத்தும் பொறுப்பினைப் பதினெண் சித்தர் மடத்திடம் ஒப்படைத்தார்கள், ஒப்படைத்தார்கள், ஒப்படைத்தார்கள்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே