பின்குறிப்பு:
(இந்த நகரின் நினைவாகத்தான் கடல்கோள்களால் தென் இமயமலையும் மேற்படி ஆறுகளும் அழிந்த பிறகு தோன்றிய வடஇமய மலையில் தோன்றிய ஆறுகளும் வடகங்கை வடயமுனை வடஇந்து (சிந்து) வடப் பிறம்ம புத்திறம் , , . முதலிய ஆறுகளின் இடங்களில் இதே பெயரை உடைய அதாவது மோகஞ் சிதறா என்ற பெயரை உடைய நகரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு சிந்து என்று சொல்லப்படும் வடஇந்து ஆற்றங்கரையில்தான் புதையுண்ட மொகஞ்சோதாரோ எனப்படும் மோகஞ் சிதறா நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. மற்ற மூன்று ஆற்றங்கரை களிலிருந்து நகரங்கள் இன்றும் கண்டுபிடிக்கப் படவில்லை. இதைப் போலத்தான் இந்த மோகஞ் சிதறா நகருக்கு அருகில் பதினெண் சித்தர் மடமும் பீடமும் தோற்றுவிக்கப்பட்ட அருட்பா நகர் இருந்திட்டது. இப்போது புதைபொருள் ஆராய்ச்சியால் வடசிந்து ஆற்றங்கரையிலேயே மொகஞ்சதாரோ நகரையொட்டியே அரப்பா நகராகக் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. அதாவது பதிணென் சித்தர்களும், பதினெண்சித்தர் பீடாதிபதிகளும் இந்த உலகில் முதன் முதல் தோன்றிய மிகப் பெரிய நிலப்பரப்பான இனமுறியாக் கண்டம் மூன்று கடல்கோள்களால் கடலுக்குள் ஆழ்ந்து அழிந்த போதிலும் அவற்றின் நினைவாகவே அக்கண்டத்திலிருந்த மலைகள், ஆறுகள், காடுகள்.. . முதலியவற்றின் தூய செந்தமிழ்ப் பெயர்களையே புதிதாகத் தோனறிய வட இமயமலை முதல், வடவேங்கடம் வரையுள்ள நிலப்பரப்பிலுள்ள மலைகளுக்கும், ஆறுகளுக்கும், காடுகளுக்கும் பெயரிட்டார்கள்)